கடந்த வருடத்தில் இந்தியாவின் 50 ஆவது வருட ஆண்டு விழாவினைச் சிறப்பிக்குமுகமாக திரு. தெய்வநாயகம், டாக்டர் டீ. தேவகலாவை சக ஆசிரியராகக் கொண்டு “இந்து சமயத்தில் கிறிஸ்தவம்” என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். 266 பக்கங்கள் கொண்ட இந்நூல், திரு. தெய்வநாயகம் ஏற்கனவே “திருக்குறள், சைவசித்தாந்தம், விவிலியம் – ஒப்பாய்வு” என்ற தலைப்பில் கொடுத்துள்ள ஆய்வுக்கட்டுரையின் ஆங்கில வடிவமாகும். இந்நூலில் அவர் எதையும் புதிதாகத் தெரிவிக்கவில்லை. இதற்கு பதிலளித்து திருமறையா? திராவிட சமயமா? என்ற சிறு நூலை நாம் வெளியிட்டதை வாசகர்கள் அறிவர். அதனைப் புதுப்பித்து மறுபடியும் வெளியிட எண்ணியுள்ளதையும் வாசகர்கள் அறிவர். “இந்து சமயத்தில் கிறிஸ்தவம்” எனும் இப்புதிய நூலை விமர்சித்து திருமறைத் தீப ஆசிரியர் ஆங்கிலத்தில் ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கத்தை இங்கே வாசகர்களுக்கு தமிழில் தருகிறோம்.