வரலாற்று கிறிஸ்தவத்தின் பாதையில் . . .

அற்புதங்களையும், அடையாளங்களையும் நாடி ஓடும் கூட்டம் இன்று குறைந்தபாடில்லை. இயேசு கிறிஸ்துவும் கொடுக்கப்பட்டுள்ள அற்புதங்களையும், அடையாளங்களையும் விட வேறு எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று சொல்லியும்கூட அவற்றைத் தொடர்ந்து அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று அவை எங்கு நடக்கின்றன என்று தேடியலையும் மனிதர்கள் கூட்டம் உலகெங்கும் தொடர்ந்து காணப்படுகின்றது. பங்கு பங்காகவும், வகைவகையாகவும் ஆதியில் பேசிய தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலம் இறுதியாகப்பேசித் தனது தெளிவானதும், முடிவானதுமான வார்த்தையை நமக்குத் தந்துள்ள போதும் அது போதாது, அதற்கு மேலும் வேண்டும், அவர் நம்மோடு நேரடியாகப் பேசினால்தான் உண்டு என்று முரட்டுப் பிடிவாதத்துடன் முரண்டு பிடிக்கும் கூட்டத்திற்கும் குறைவில்லை.

Continue reading