“பிரசங்கத்தைக் கேட்கிறவர்களின் அழிவே பயங்கரமானால் பிரசங்கிக்கிறவர்களின் அழிவு அதைவிட பயங்கரமானதல்லவா?”
-ஸ்பர்ஜன்-
போதக ஊழியம்
மெய்யான தாழ்ச்சி – நிபுணனான இசை அறிஞன் ஒருவன் ஒரு வீணையை எடுத்து வாசிக்கும்போது சில தந்திகளில் இராகம் தவறுகிறதென்று கண்டால் உடனே நிறுத்தி விடுவான். அப்படியே பரிசுத்த ஆவியானவரும் சிலருடைய ஆத்துமாக்கள் வஞ்சகமும், திருக்கும், இரு மனமும் உள்ளவைகளாக இருக்கின்றனவென்று காணும்போது அவைகளில் கிரியை செய்கிறதில்லை. கிறிஸ்துவின் ஆவியானவர் வஞ்சகத்திற்கு துணை நிற்கமாட்டார். சில ஊழியக்காரர் சில உபதேசங்களைத் தாம் விசுவாசியாவிட்டாலும் சபையாரின் நிமித்தம் பிரசங்கிப்பதுண்டு. அப்படிச் செய்கிறவர்கள் மகா ஈனமான அடிமைகளைவிட இழிவானவர்கள். நாம் வஞ்சக பிரசங்கிகளாக இராதபடி தேவன் நம்மைக் காப்பாராக.