“பிரசங்கத்திற்கான செய்தி எப்பொழுதும் நேரடியாக வேதத்திலிருந்தே தோன்ற வேண்டும். நாம் ஒரு செய்தியை மனதில் வைத்துக் கொண்டு அதை நிருபிப்பதற்கான வசனங்களை வேதத்தில் தேடிப் பார்க்கக் கூடாது.”
-மார்டின் லொயிட் ஜொன்ஸ்-
வியாக்கியானப் பிரசங்கம்
Expository Preaching
போதகர்கள் எவ்வாறு பிரசங்கம் செய்ய வேண்டுமேன்று போதிக்கும் அநேக நூல்கள் ஒரு சிறு நூலகத்தை நிரப்புமளவுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் வேதபூர்வமான வியாக்கியானப் பிரசங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவை ஏராளம்.
எல்லா கிறிஸ்தவ அனுபவங்களுக்கும் கோட்பாடுகளே அடிப்படையாக உள்ளது. கோட்பாடுகளை அடித்தளமாகக் கொண்டு அமையாத கிறிஸ்தவ அனுபவம் நிலத்தில் புதைக்கப்படும் வெட்டப்பட்ட ஒரு மலரைப் போன்றதாகும். அது வெகு சீக்கிரத்தில் அழிந்து விடும். கோட்பாடுபூர்வமான வியாக்கியானப் பிரசங்கம் வேதபூர்வமான அனைத்து பிரசங்கங்களுக்கும் அடித்தளமாக இருப்பது மட்டுமன்றி, அவற்றின் சரீரமாகவும் உள்ளது. கிறிஸ்தவ கோட்பாடுகள் கிறிஸ்தவத்தைப் பற்றிய சத்தியத்தைத் தவிர வேறில்லை. வேதம், எல்லா வேதவாக்கியங்களும் போதிப்பதற்கு நன்மையாயுள்ளன என்று கூறுகின்றது.