பழைய ஏற்பாடு

பழைய ஏற்பாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி புதிய ஏற்பாடு பல இடங்களில் வலியுறுத்துகிறது. பவுல் அப்போஸ்தலன் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில் (2 தீமோத்தேயு 3:14-17) “வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது . . . தேவனுடைய மனிதன் தேறினவனாக இருக்கும்படியாக அவை பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கின்றது”

என்று கூறும்போது பழைய ஏற்பாட்டினையே கருத்தில் கொண்டிருந்தார். இவ்வசனங்கள் முழு வேதத்தையும் குறித்தபோதும் தீமோத்தேயுவிடம் அன்றிருந்தது பழைய ஏற்பாடு மட்டுமே. தேவையான அனைத்தையும் அன்று பழைய ஏற்பாடு கொண்டிருந்தது. பழைய ஏற்பாட்டைத்தவிர அன்று தீமோத்தேயுவிற்கு வேறெதுவுமே தேவையாயிருக்கவில்லை. பழைய ஏற்பாட்டு வேதம் திருத்துவதற்கும், நீதிமானாவதற்கும் போதுமானது என்று பவுல் கூறுகின்றார்.

Continue reading