கிறிஸ்தவ விசுவாசம் என்பது மனத்தால் சிந்தித்துப் புரிந்து கொள்ளக்கூடியது. அதை நாம் நமது மொழியில் விளக்கிக்கூற முடியும். அதே நேரம், அது அனுபவபூர்வமானது. விசுவாசத்தைப் பற்றி வேதத்தில் இவ்வாறுதான் வாசிக்கிறோம். விளக்கிக்கூற முடியாததும், சிந்தித்துப்புரிந்து கொள்ள முடியாததும், வாழ்க்கையில் அனுபவிக்க முடியாததும், விசுவாசமாக இருக்க முடியாது. இன்று அநேகர் விசுவாசம் என்ற பெயரில் போலிக் கொள்கைகளைப் போதித்துக் கொண்டிருக்கின்றனர். இது ஏதோ மனத்தால் புரிந்து கொள்ள முடியாத ஒரு மாயாஜால வித்தைபோல் பலருக்குப்படுகிறது. இப்படிப் பேசுகிற பலரை நான் அடிக்கடி சந்தித்திருக்கிறேன்.