இன்று சிதைந்து, சீரழிந்து கொண்டிருக்கும் குடும்பத்தைப் பிடித்துள்ள சாபக்கேட்டிலிருந்து அதை விடுவிப்பதெப்படி? இதற்கான வேதபூர்வமான விளக்கத்தை இத்தொடர் அளிக்கிறது.
குடும்பம் ஒரு ஆலயம்
குடும்பம் ஒரு ஆலயம் என்று கூறி குடும்பத்தை ஆலயத்திற்கு ஒப்பிட்டு நமது பெரியோர்கள் பேசியுள்ளார்கள். தேவனை அறியாத மக்கள் மத்தியிலும் குடும்பத்தின் பெருமை உணரப்பட்டு அதற்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலும் குடும்பத்தின் பெருமையைப் பற்றி வாசிக்கலாம். வள்ளுவர்கூட தன் நூலில் அதற்குப் பல அதிகாரங்களை ஒதுக்கியுள்ளார். இருந்த போதும், வேதம் மட்டுமே குடும்பம் என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும்? என்று அதிகாரத்துடன் கூறக்கூடிய உலகிலுள்ள ஒரே நூலாக இருக்கின்றது. தேவனை அறியாத மனிதர்களுக்கும் குடும்பத்தைப்பற்றிய அறிவைத் தந்துள்ள ஒரே நூல் வேதமே.