இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசிகளைக் குறிப்பதற்காக கிறிஸ்தவர்கள் என்ற வார்த்தையைத் தவிர வேறு பெயர்களைப் பயன்படுத்த வேண்டிய நிலைமை குறித்து நமக்கு கவலை ஏற்பட்டாலும், அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை சபை வரலாற்றில் தோன்றிய மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளன. இன்றைய சூழலில் இது மிகவும் உண்மையானதாகும். ஏனெனில், இன்று கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் பலர், கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடக்காமலும், அவரது மந்தையைச் சேர்ந்தவர்களாகத் தம்மை நிருபித்துக்காட்ட முடியாமலும் இருப்பது (யோவான் 10) கிறிஸ்தவர்களைக் குறிக்க வேறு பெயர்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.