லூதரின் கேட்டி

கத்தோலிக்க மதகுருக்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த எரிமலையாம் லூதரின் வாழ்வில் வசந்தகால வானம்பாடியாக சங்கீதமிசைத்தார் கேட்டி.

லூதரின் கேட்டி

மார்டின் லூதருடைய வாழ்க்கையில் திருமணம் எதிர்பாராதவிதமாகவே நடந்தது. கத்தோலிக்க மடத்தில் இருந்து பெண்கள் தப்புவதற்காக லூதர் உதவி வந்தார். அவ்வாறு ஒரு முறை அவர் உதவி செய்த பெண்கள் குழுவில் கெத்தரின் வான் போரா இருந்தார். லூதர் கெத்தரினை தனது நண்பர்களில் ஒருவருக்கு மணமுடித்து வைப்பதில் பெரு முயற்சி செய்தார். ஆனால், கெத்தரின் அவரைத் திருமண முடிக்க மறுத்து லூதரை மணமுடிப்பதில் ஆர்வம் காட்டினார். இறுதியில் லூதரே கெத்தரினை மணமுடித்தார். லூதரின் திருமணத்தில் ஐரோப்பா முழுவதுமே ஆர்வம் காட்டினது. அதை எதிர்த்துப் பழித்துப் பேசியவர்களும் அநேகம். ஆனால், லூதர் எல்லையில்லாத மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தார். லூதர் ஆசையாக தனது அன்பு மனைவியை எப்போதும் கேட்டி என்று கூப்பிடுவது வழக்கம். கேட்டி லூதரின் வாழ்வில் பெருமாறுதல்களைக் கொண்டு வந்தார். திருமணத்திற்கு முன் லூதரின் வேலை மிகுதியால் ஒரு வருடம் அவருடைய கட்டில் சீர் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலைமையில் கேட்டியின் வருகை லூதருக்கு எத்தகைய சந்தோஷத்தை அளித்திருக்கும்.

Continue reading