மனமகிழ்ச்சிக்குரிய ஓய்வு நாள்

ஓய்வு நாளைக் குறித்த பல சந்தேகங்களைக் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கிறார்கள். இப்புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நமக்கும் அந்நாளுக்கும் என்ன தொடர்பு? அந்நாளை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

மனமகிழ்ச்சிக்குரிய ஓய்வு நாள்

ஓய்வு நாளைக் குறித்து கடந்த இதழில் பார்த்தபோது பழைய ஏற்பாட்டில் ஏசாயா மூலம் கர்த்தர் அந்நாளின் சிறப்பம்சங்களைப் பற்றியும், அந்நாளைக் கைக்கொள்வதால் கர்த்தருடைய மக்கள் அடையக்கூடிய பயன்களையும் குறித்துப் போதித்த உண்மைகளைப் பார்த்தோம். இவ்விதழில் அந்நாள் பழைய ஏற்பாட்டு மக்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட ஒரு நாளல்ல, கிறிஸ்தவர்கள் அனைவருமே எக்காலத்திலும் பின் பற்ற வேண்டிய ஒரு நாள் என்பதற்கான வேத ஆதாரங்களைப் பார்ப்போம். ஓய்வு நாளை இன்று நாம் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று வேதத்திற்கு முரணாக சிலர் கிறிஸ்தவர்கள் மத்தியில் பேசியும், நடந்தும் வருவது கிறிஸ்தவர்கள் அறிந்த உண்மை. முக்கியமாக Dispensationalism, New Covenant Theology போன்ற போதனைகள் ஓய்வு நாளை எதிர்க்கிறன. இப்போதனைகள் சரிதானா? என்பதையும் நாம் ஆராய்வது அவசியம். வேதம் போதிக்கும் சத்தியத்தை எடுத்து விளக்கும்போது, அதற்கெதிரான போதனைகளை வெளிப்படுத்துவதும் சத்தியத்தைப் போதிப்பதன் மறுபகுதி என்று இவ்விதழின் தலைப்புக் கட்டுரையில் மொரிஸ் ரொபட்ஸ் கூறியிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

Continue reading