தமிழ் நாட்டில் சென்னையில் இருந்து நான்கு பக்கங்களைக் கொண்டு வெளிவரும் ஒரு பத்திரிகை “ரெட் டுளிப்” (Red Tulip). இது பற்றி நமது பத்திரிகையில் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் “டுளிப்” என்ற பெயரில் வெளி வந்த இப்பத்திரிகை பின்பு “ரெட் டுளிப்” என்ற பெயரில் வெளிவரத் தொடங்கியது. இப்பத்திரிகையின் சில போதனைகள் பற்றி ஆசிரியரின் கவனத்திற்கு சில வருடங்களுக்கு முன்பே கொண்டு வரப்பட்டது. ஆனால், பத்திரிகை கையில் கிடைக்காததால் அதுபற்றி அறிந்து கொள்ளவோ எழுதவோ முடியவில்லை. இப்பத்திரிகையின் பல பிரதிகள் வாசகர்கள் மூலம் இப்போது கிடைத்திருப்பதனாலும், அதில் வரும் கட்டுரைகளை வாசிக்க முடிந்ததனாலும் இது பற்றி எழுத முடிகிறது.