திருச்சபை வரலாறு

 இரண்டாம் நூற்றாண்டு

திருச்சபை வரலாறு பற்றி எழுத வேண்டுமென்று அநேகர் பல வருடங்களாகவே கேட்டு வந்துள்ளனர். தமிழில் முறையாக எழுதப்பட்ட திருச்சபை வரலாற்று நூல்கள் இல்லை. இருப்பவையும் ரோமன் கத்தோலிக்க மதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டு சீர்திருத்த காலத்தை வேண்டத்தகாததாகவே படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்தியாவில் இருந்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள சபை சரித்திர நூல்களும் இதே வகையில்தான் எழுதப்பட்டுள்ளன. சமீபத்தில் செராம்பூர் கல்லூரி நிர்வாகத்தினரால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்திய திருச்சபை சரித்திர நூல் ஒன்றை நான் பெற்று வாசிக்க முடிந்தது. இதில் ரோமன் கத்தோலிக்க சபை கிறிஸ்தவ சபையாகவே வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, சீர்திருத்த விசுவாசத்தின் அருமை பெருமைகளையும், அதன் அவசியத்தையும் வாசகர்கள் புரிந்துகொள்ள திருச்சபை வரலாறு அவசியம் என்பதானலும், சீர்திருத்த, சுவிசேஷ இயக்கத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட திருச்சபை வரலாற்று நூல் ஒன்று தமிழில் இல்லாத குறையைத் தீர்ப்பதற்காகவும் இப்பக்கங்களில் தொடர்ந்து திருச்சபை வரலாறு பற்றி எழுதத் தீர்மானித்துள்ளேன். சீர்திருத்தப்‍போதனைகள் வளர இதைக் கர்த்தர் பயன்படுத்துவராக!
– ஆசிரியர்

Continue reading