இப்பகுதியில் நாம் ஒரே கோட்பாடுகளைப் பின்பற்றி ஆவிக்குரிய அன்போடு ஒருவரில் ஒருவர் நம்பிக்கை வைத்து, வளர்ந்து கொண்டிருக்கும் சீர்திருத்த பாப்திஸ்து சபைகளை மனதில் வைத்தே இதை எழுதுகிறோம். ஒரே கோட்பாடுகளை பின்பற்றாதவர்களுக்கு இவை பொருந்தாது.
1. பொதுவான கடிதத் தொடர்பை ஏற்படுத்தி நம்மோடு ஐக்கியத்திலுள்ள சபை நமது சபையையும், சபைக் காரியங்களையும் பற்றி அறிந்து ஐக்கியத்தில் வர துணை செய்தல் அவசியம்.