வேத வசனம் வல்லமையுள்ளதாய் இருக்கிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். அது தேவனுடைய வசனமாக இருப்பதால் உலகத்து மனிதர்களின் எழுத்துக்களைவிட மேன்மையுள்ளதாய் இருக்கிறது. வேத வசனத்தால் மனிதன் ஜீவனை அடைய முடியும். வேறு நூல்களால் அதை அளிக்க முடியாது. வேத வசனம் ஆத்துமாக்களை பரலோக வாழ்வில் வழி நடத்தக்கூடியதாய் இருக்கிறது. வேத வசனம் ஆத்துமாவின் பாவத்தை கண்டித்து உணர்த்தி கர்த்தரின் வழியில் செல்ல உதவக்கூடியதாய் இருக்கிறது. அதை உலகத்தில் காணப்படும் சாதாரண மனிதர்களின் எழுத்துக்களால் செய்ய முடியாது. இது நம்மில் அநேகர் அறிந்த சத்தியம். ஆனால், வேத வசனங்கள் ஆத்துமாவில் இவற்றை எப்படிச் செய்கின்றன என்ற உண்மை சிலருக்குப் புரியாமலிருக்கின்றது.