ஆதி சபை சந்தித்த கள்ளப் போதனைகள்

இரண்டாம் நூற்றாண்டில் அநேக கள்ளப்போதனைகள் தலைதூக்கி வளர்ந்தன. அவற்றில் முக்கியமானவற்றைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நாசரீயர்கள் (Nazareans)

ஆரம்பத்தில் கிறிஸ்தவ திருச்சபை இப்பெயரால் அழைக்கப்பட்டது. பின்பு பவுலுக்குத் தொல்லைதந்த, ஆரம்பகால யூதர்களைப் பின்பற்றிய ஒரு கூட்டம் இப்பெயரில் அழைக்கப்பட்டது. கி.பி. 70களில் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்பு யூத கிறிஸ்தவர்கள் யோர்தானைத்தாண்டி பீலா என்ற இடத்தில் பாதுகாப்பு கருதி அடைக்கலம் புகுந்தனர். இவர்கள் வழி வந்தவர்கள் ஆரம்பகால யூத கிறிஸ்தவர்கள் கைவிட்டுவிட்ட யூத கலாச்சாரத்தையும், வழிமுறைகளையும் விடாப்பிடியாகப் பின்பற்றி வந்தனர். இவர்கள் மோசேயினுடைய நியாப்பிரமாணத்தை எழுத்து பூர்வமாகப் பின்பற்றியதோடு, விருத்தசேதனத்தையும், யூத சபத்து சம்பந்தமான ரபாய்களுடைய விதிமுறைகளையும் பின்பற்றி வந்தனர். இவர்களுடைய தாக்கம் பெருமளவில் இல்லாதபோதும் நான்காம் நூற்றாண்டு முடிவுவரை இவர்களைப் பின்பற்றியோர் இருந்து வந்துள்ளனர். இவர்களுடைய வழிமுறைகள் கிறிஸ்தவ வேத போதனைகளுக்கு முரணாயிருந்தன. கிறிஸ்தவம் யூத சமய சம்பந்தமான கட்டளைகளைத் தொடர்ந்து பின்பற்றும்படிப் போதிக்கவில்லை.

Continue reading