1689 விசுவாச அறிக்கை (அதிகாரம் 4)

படைப்பு

எழுதியவர்: டேவிட் சான்ஸ்கி
தமிழில்: ஆசிரியர்

1. ஆதியிலே கடவுளாகிய பிதா, குமாரன், ஆவி ஆகியோர் தம்முடைய மகிமையுள்ள நித்திய வல்லமை, ஞானம், நற்குணம் ஆகியவற்றின் வெளிப்பாட்டிற்காக ஆறு நாட்களில் உலகத்தையும் காணக்கூடியதும், காணமுடியாததுமான அதிலுள்ள அனைத்தையும் படைக்கத் திருவுளங்கொண்டார். அவையனைத்தும் மிக நல்லவையாக இருந்தன.

யோவான் 1:2-3; எபிரேயர் 1:2; யோபு 26:23; ரோமர் 1:20; கொலோசேயர் 1:16; ஆதியாகமம் 1:31.

2. கடவுள் மற்ற எல்லா படைப்புயிர்களையும் படைத்தபின்பு, அறிவுள்ளதும் அழியாததுமான ஆன்மாக்களோடு, ஆணும் பெண்ணுமாக மனித இனத்தை அவருக்காக வாழ வேண்டிய வாழ்க்கையைக் கொடுத்துப் படைத்தார். அவர்கள் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டு, அறிவையும், நேர்மையையும், மெய்யான பரிசுத்தத்தையும் கொண்டு, தங்களுடைய இருதயத்திலே எழுதப்பட்டிருக்கும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றும் வல்லமையுடையவர்களாய் இருந்தார்கள். அதேவேளை, மாறும் தன்மையுள்ள தங்களுடைய சுயசித்தத்தின் முழுச்சுதந்திரத்தோடு (கட்டுப்பாட்டை மீறும் சுதந்திரம்) பாவம் செய்யக்கூடிய சாத்தியத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.

ஆதியாகமம் 1.26, 27; 3:6; பிரசங்கி 7:29; ரோமர் 2:14, 15.

Continue reading