தெய்வீக பராமரிப்பு
எழுதியவர்: லாமார் மார்டீன்
தமிழில்: ஆசிரியர்
1. அனைத்தையும் படைத்த நல்லவராகிய கடவுள், தமது அளவற்ற வல்லமையாலும், ஞானத்தாலும் மிகுந்த விவேகதுள்ள தமது பரிசுத்த பாரமரிப்பினாலும் பெரிதானதிலிருந்து சிறியதான எல்லாப்படைப்புயிர்களையும், பொருட்களையும், தன்னுடைய படைப்பின் நோக்கத்தின் நிறைவேற்றுதலுக்காகத் தாங்கி, வழிகாட்டி ஆண்டு வருகிறார். தவறாநிலையுடைய முன்னறிவாலும் தமது சுயசித்தத்தின் தன்னுரிமையுள்ள மாறாத்திட்டத்தின் மூலமும், மகிமையுள்ள தமது ஞானம், வல்லமை, நீதி, எல்லையற்ற நற்குணம், இரக்கம் ஆகியவற்றின் துதிக்காகவும் கடவுள் அனைத்தையும் ஆண்டு வருகிறார்.
யோபு 38:11; சங்கீதம் 135:6; ஏசாயா 46:10, 11; மத்தேயு 10:39-31; எபேசியர் 1:11; எபிரேயர் 1:3.