நூல் அறிமுகம்

‘தேவனுடைய இராஜ்யம், ஆயிரம் வருட அரசாட்சி’

தமிழகத்தில் வாழும் ம. பிரேம் குமார் என்பவர் இந்நூலை எழுதியுள்ளார். கடைசிக்காலம் பற்றிய விளக்கங்களுடன் இந்நூல் வெளிவந்திருக்கின்றது. இந்நூல் -பியூச்சரிச டிஸ்பென்சேஷனல் கோட்பாட்டை- நிராகரித்து எழுதப்பட்டிருக்கிறது; அதாவது வெளிப்படுத்தல் விசேஷத்தின் மூன்றாம் அதிகாரத்திற்குப் பிறகு வரும் அதிகாரங்கள் இனித்தான் நடக்கப் போகின்றன என்ற விளக்கத்தை அடியோடு ஆசிரியர் நிராகரிக்கிறார். அக்கோட்பாட்டின் ஒன்றுக்கு மேற்பட்ட கிறிஸ்துவின் வருகை, அவரது இரகசிய வருகை, இரண்டுக்கு மேற்பட்ட உயிர்த்தெழுதல்கள், இவ்வுலகில் அமையப் போவதாக அவர்கள் கருதும் இஸ்ரவேலை மையமாகக்கொண்ட கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சி, கர்த்தர் இரண்டுவிதமான மக்களைக் கொண்டிருக்கிறார், கர்த்தரின் திட்டத்தில் திருச்சபை ஒரு தற்காலிக இடைச்செருகல் ஆகிய போதனைகளனைத்தையும் வேத விளக்கங்களுடன் இந்நூல் நிராகரிக்கிறது. அதுவரையில் இதன் விளக்கங்கள் நல்ல பயனுற்ற முயற்சி.

Continue reading