இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் இஸ்ரவேலும் பாலஸ்தீனியர்களும் தீவிரமாக சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒவ்வொருமுறையும் இஸ்ரவேல் சண்டையில் ஈடுபடும்போதோ அல்லது தாக்கப்படும்போதோ அதில் அதிக அக்கறை எடுத்து எதிர்காலத்தைப்பற்றி தீர்க்கதரிசனம் சொல்ல கிறிஸ்தவர்களில் ஒருபகுதியினர் எப்போதுமே முயல்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரையில் இது இவர்களுடைய கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படை அம்சம். இதற்குக் காரணம் என்னவென்றால் கிறிஸ்துவின் ஆயிரம் வருட ஆட்சிபற்றி இவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையே. அது என்னவென்று இனிப் பார்ப்போம்.