அப்போஸ்தலர்களுடைய காலத்துக்குப் பிறகு திருச்சபைத் தலைவர்களாக இருந்த சபைப்பிதாக்களைப்பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். அப்போஸ்தலர்களைப்போல விவேகமுதும், ஞானமும், திறமையும் கொண்டவர்களாக இவர்களில் அனைவரும் இல்லாவிட்டாலும் ஒரு சிலர் குறிப்பிமத்தக்கவர்களாக இருந்தனர் என்றும் கடந்த இதழில் பார்த்தோம். இவர்கள் காலத்தில் திருச்சபை பல போலிப்போதனைகளை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் பலவீனமடைந்து வந்ததையும் பார்க்கிறோம். சபைத் தலைவர்கள் வேதபூர்வமான தகுதிகளைக் கொண்டிராதபோது திருச்சபை வரலாற்றில் இந்நிலையையே சந்திக்க வேண்டி வந்தது. ஒரு நூற்றாண்டுகள் உலகைத் தன்பக்கம் திருப்பிய திருச்சபை இப்போது தளர்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது.