இயேசு நரகத்திற்குப் போனாரா?

ரோமன் கத்தோலிக்க மதம் இயேசு மரித்தபின் உயிர்த்தெழுவதற்கு முன்பு மூன்று நாட்களுக்கு நரகத்தில் போய் இருந்தார் என்று போதிக்கிறது. இதையே லூத்தரன் சபையும் விசுவாசிக்கிறது. வார்த்தை-விசுவாசம் (Word-Faith) என்ற பெயரில் கெரிஸ்மெட்டிக் கூட்டத்தில் ஆரம்பித்துள்ள ஒரு புதிய கூட்டமும் இதைப் போதிக்கிறது. கத்தோலிக்கரும், லூதரன்களும், கிறிஸ்து பாவத்தை அனுபவிப்பதற்காக நரகத்திற்கு போகாமல் பாவத்தை வெற்றி கொள்வதற்காக நரகத்திற்குப்‍ போனார் என்று போதிக்கிறார்கள். வார்த்தை-விசுவாசக் கூட்டத்தைச் சேர்ந்த ஜொய்ஸ் மாயர் (Joyce Mayer) என்ற பெண் ‘போதகி’!, கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போதே பாவியானார் என்றும், அவர் மரித்தபின் நரகத்திற்குப் போய் தன் பாவத்திற்கான தண்டனையை அனுபவித்தார் என்றும், அதனாலேயே அவரால் பாவத்தின் கொடுமையை உணர்ந்து நம்மேல் பரிதாபப்பட முடிகின்றது என்றும் விளக்குகிறார். இன்று, சுவிசேஷ விசுவாசிகளில் பவர் கூட இந்தத் தவறான போதனையை உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். வேதம் இதைப்பற்றி என்ன சொல்கிறது என்று ஆராய்வோம்.

Continue reading