கர்த்தருடைய ஊழியக்காரர்களைக் குறைகூறக் கூடாதென்றும், அப்படிக்குறை கூறுபவர்கள் கர்த்தரின் சாபத்திற்கு உள்ளாக நேரிடும் என்றும் கூறி அதற்கு பழைய, புதிய ஏற்பாட்டு வசனங்களை ஆதாரமாகக்காட்டி இன்று ஆத்துமாக்களை பயமுறுத்தி வருகிறது ஒரு கூட்டம். கர்த்தருடைய ஊழியக்காரர்களை நாம் கனம் பண்ண வேண்டுமே தவிர அவர்களை ஒருபோதும் குறைகூறக்கூடாதென்கிறார்கள் இவர்கள். இதற்கு இவர்கள் உதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கும் பழைய ஏற்பாட்டு வசனம். “நான் அபிஷேகம் பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும் என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்” என்பதாகும் (1 நாளாகமம் 16:22; சங்கீதம் 105:15). அத்தோடு 2 சாமுவேல் 19:21ஐயும் உதாரணமாகக் காட்டி கர்த்தரின் ஊழியக்காரரைக் குறை கூறுபவர்களைக் கர்த்தர் சபிப்பார் என்றும் பயமுறுத்துகிறார்கள்.