டர்டூலியனும், சிப்ரியனும்

ரோம சாம்ராஜ்யத்தில் ரோமுக்குப் பிறகு அலெக்சாந்திரியா முக்கிய இடத்தை வகித்தது என்றும், அலெக்சாந்திரியாவில் இருந்த திருச்சபையின் முக்கிய தலைவர்களைப் பற்றியும் இதுவரை பார்த்தோம். இனி வட மேற்கு ஆபிரிக்காவில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த நகரான கார்த்தேஜில் இருந்த சபை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். வட ஆபிரிக்காவுக்கு எப்போது கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதற்கான எந்தக்குறிப்புகளும் இல்லை. ஆனால், வரலாற்றின் பக்கங்களில் கி.பி. 180ல் திடீரென ஒரு வல்லமையுள்ள, வளரும் சபை கர்த்தேஜில் இருந்ததாக வாசிக்கிறோம். இச்சபையின் அங்கத்தவர்கள் அக்காலத்தில் தங்களுடைய விசுவாசத்திற்கெதிரான பல துன்பங்களையும் சந்தித்து வந்துள்ளனர். டர்டூலியன், சிப்ரியன், அகஸ்தீன் ஆகியோர்கள் இந்த சபையின் அங்கத்தவர்களாக இருந்து வருங்காலத்து மக்கள் அறிந்து கொள்ளும்படியாக தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மூலம் வரலாற்றில் ஒரு முத்திரையைப் பதித்துச் சென்றுள்ளனர். கார்த்தோஜிலிருந்தே முதன்முறையாக லத்தீனில் கிறிஸ்தவ இலக்கியம் உருவானது. அழகாகவும், பெரியதாகவும் இருந்த கார்த்தேஜ் நகரம் லத்தீன் கலாச்சாரத்தின் மையமாக விளங்கியது.

Continue reading