திருச்சபைகளில் இன்று பிரசங்கப் பஞ்சம் நிலவுகிறது என்பதை சிந்திக்கக்கூடிய கிறிஸ்தவர்கள் உணர்வார்கள். நம்மை இப்பஞ்சம் வாட்டிக் கொண்டிருப்பதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன. கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே இறையியல் பஞ்சம் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவி வந்துள்ளது. சத்தான இறைபோதனை எதுவும் இல்லாமல், சொந்த அனுபவங்களை மட்டும் அள்ளித்தெளிக்கும் சுவிசேஷப்பிரங்கங்கள் என்ற பெயரில் கொடுக்கப்படும் பேச்சுக்களையே ஆத்துமாக்கள் கேட்டு வாழ வேண்டிய நிலை இருந்துவந்துள்ளது. வேத போதனைகளைப் பெற்று வளர்ந்திராத நம்மவர்கள் உணர்ச்சியூட்டம் இந்தப் பேச்சுகளையே பிரசங்கமாகக் கேட்டு வளர்ந்திருக்கிறார்கள். சொந்த ஊழியங்கள் என்ற பெயரில் பெருமளவில் தனி நபர்களின் சுவிசேஷ வியாபார ஊழியங்கள் பெருகியபின் கொஞ்சநஞ்சமிருந்த பிரசங்கமும் இல்லாமல் போய் இன்று பிரசங்கப் பஞ்சத்தால் தமிழ் சமுதாயம் வாடிக் கொண்டிருக்கின்றது. இதை அநேகர் உணருகிறதாக இல்லை.