திருச்சபைகள் தவறாமல் இன்று வாலிபர்களுக்காக கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது நன்மையான காரியம். அதுவும் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் அத்தகைய கூட்டங்கள் அவசியம். கலாச்சாரம் இளைஞர்கள் ஒன்றுகூட முடியாதபடி தடுத்துவைத்திருக்கின்றன நிலமையில் கிறிஸ்தவ இளைஞர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள இத்தகைய கூட்டங்கள் தேவை. ஆனால், இன்று சில இடங்களில் இத்தகைய கூட்டங்கள் தவறான விதத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. சபைப் போதகர்களின் மேற்பார்வையே இல்லாமல் வாலிபர்கள் தம் மனம்போனபடி நடந்து கொள்ளும்வகையில் இந்தக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. வேறு சில இடங்களில் சபைத்தொடர்பில்லாத நிறுவனங்களைச் சேர்ந்தோர் இந்தக் கூட்டங்கள் நடத்தி தம் நிறுவனங்களுக்கு ஆள் சேர்த்துக்கொள்ளும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது திருச்சபையைச் சேர்ந்த வாலிபர்கள் வளர உதவி செய்யாது. இன்னும் சில இடங்களில் இந்தக்கூட்டங்களில் ஆவிக்குரிய காரியங்களைவிட உலகஇச்சைக்குரிய காரியங்களே அதிகம் இடம்பிடிக்கின்றன.