முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்து கிறிஸ்தவர்களை சிந்திக்கும்படிச் செய்திருக்கிறார். தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்கள் சிந்திப்பதை எப்போதோ ஆற்றில் கைகழுவிவிட்டது பழைய கதை. அதற்கு இப்போது நேரம் வந்திருக்கிறது. அப்படி நாம் சிந்திக்கும்படியாக முதல்வர் என்ன செய்திருக்கிறார்? என்று கேட்கிறீர்களா. ஆம்! முதல்வர் ஒருவிதத்தில் நமக்கு நன்மையே செய்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். இதை விளக்குவது அவசியம்.