துன்பமும், ஆறுதலும் (4-ம் நூற்றாண்டு)
அலெக்சாண்டர் செவேரஸின் (Alexander Severus 222-235) காலத்திலும், அரேபியனாகிய பிலிப்பின் காலத்திலும் (Philip the Arabian 244-249) ரோமப் பேரரசு திருச்சபையிடம் நட்போடு நடந்து கொண்டது. இந்தக் காலப்பகுதியில் மனிதர்கள் எல்லா சமயங்களையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் இருக்கும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகக்கூடிய காரியங்களின் அடிப்படையில் எல்லோருக்கும் பொதுவான ஒரு சமயத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். செவேரஸூடனும், பிலிப்புடனும் ஒரிகன் (Origan) நல்ல நட்புடன் கடித்த்தொடர்பை வைத்திருந்தார். 38 ஆண்டுகளுக்கு திருச்சபையால் அமைதியை அனுபவிக்க முடிந்தது. இதன் காரணமாக திருச்சபை வளர்ந்து அதன் அங்கத்தவர்களின் தொகை அதிகரித்து, சமுதாயத்தில் திருச்சபைக்கு அதிக மதிப்பும் இருந்தது. ஆனால், டேசியனாலுத் (Decius), வெலேரியனாலும் (Valerain) திருச்சபைக்கு பெருந்துன்பம் ஏற்பட்டது. திருச்சபை இத்துன்பத்தை 250-ல் இருந்து 260 வரை அனுபவிக்க நேர்ந்தது.