கடந்த இதழில் கீழ்வரும் அட்டவனையில் உள்ள உண்மைகளை டாக்டர் பீட்டர் மாஸ்டர்ஸ் விளக்கியதைப் பார்த்தோம். இந்த இதழில் அவரது ஆக்கத்தின் இறுதிப்பகுதியைப் பார்ப்போம்.
(1) ஆண்டவரைத் தேடுகிறவனுக்கு பாவத்தைப்பற்றிய செயற்கையான எண்ணமே இருக்கிறது.
(அ) அவனுக்கு மனந்திரும்புதலைப் பற்றிய பொதுவான அறிவு மட்டுமே இருக்கிறது.
(ஆ) தேடுகிறவன் வெளிப்புறமான பாவத்தை மட்டுமே பார்க்கிறான்.
(இ) அவன் ஓரிரு பாவங்களையும், தவறுகளையுமே அறிக்கையிடுகிறான்.
(ஈ) தான் செய்துள்ள நற்கிரியைகளைப் பற்றி பெருமையுடையவனாக இருக்கிறான்.
(உ) பாவத்தை அவன் வெறும் நோயாக எண்ணிக் கொண்டிருக்கலாம்.
(ஊ) பாவத்தை மறைக்க அவன் சாக்குப்போக்கு சொல்லலாம்.
(எ) கிறிஸ்துவை நிராகரிப்பதை மட்டுமே பாவமாக எண்ணிக்கொண்டிருக்கலாம்.
(ஏ) யாருக்கும் தெரியாமலிருக்கும் பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டியதில்லை என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறான்.