மலேசிய மண்ணில் . . .

மலேசியா தென்கிழக்காசியாவின் முக்கிய நாடுகளில் ஒன்று. உலகத்திலேயே மிக உயரமான பெட்ரோனாஸ் (Petronas) கட்டிடங்களுக்கும், மிக அழகிய டெலிகொட் டவருக்கும் (Telecom Tower) மலேசியா பெயர்போனது. இருள் மடிந்த இரவு நேரத்தில் மலேசியாவின் கோலாலம்பூர் நகர் முழுவதும் பளிச்சென்று ஒளிவீசுவது அந்நாட்டுக்குப்போய் வருபவர்களுக்கு எப்போதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதுவும் பெட்ரோனாஸ் கட்டடங்கள் இரவு நேரங்களில் பல வர்ணங்களில் மாறிமாறித் தோற்றமளித்து அந்நாட்டின் எழுச்சியையும், வளர்ச்சியையும் பறைசாற்றுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் தோன்றும். சில வருடங்களுக்கு முன்பு தென்கிழக்காகிய நாடுகளைத் தாக்கிய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து ஓரளவுக்கு விடுபட்டு மறுபடியும் தலைதூக்கி நிற்கும் மலேசியாவில் எங்கு பார்த்தாலும் புதுப்புது கட்டிடங்களும், தொழிலகங்களும், அப்பாட்மென்டுகளும் உருவாகி வருவதைக் கவனிக்காமல் இருக்க முடியாது. வளர்ந்து வரும் நாடான மலேசியா கணினித் தொழில் நுட்பத்துறையில் அதிக அக்கறைக்காட்டி வருவதோடு, செம்பனை எண்ணெய் ஏற்றுமதியில் முன்னிற்கிறது. அந்நாட்டின் பிரதமரான மகாதீர் நல்லதொரு நிர்வாகத்தை நாட்டுக்கு அளித்து அதன் வளர்ச்சிக்குக் காரணடாக இருந்து வருகிறார். பிரதமர் மகாதீர் கூடிய விரைவில் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

Continue reading