இன்று மேலைத்தேசங்களிலும், கீழைத்தேசங்களிலும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒழுக்கக்குறைவு அதிகமாக காணப்படுவதை நாமெல்லோருமே அறிந்திருக்கிறோம். உலக இச்சை கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் இன்று அதிகம் குடிகொண்டிருக்கிறது. இன்டர்நெட் மூலம் மனைவிக்குத் தெரியாமல் வேறு பெண்களோடு தொடர்பு கொண்டு பாலியல் இச்சைக்கு (Sexual perversion) தங்களை ஒப்புக்கொடுத்த ஊழியக்காரர்களைப் பற்றியும், தன்னினச்சேர்க்கைக்கு (Homosexuality) இடம்கொடுத்து ஒழுக்கத்தை இழந்த ஊழியக்காரர்கள் பற்றியும், பெண்ணாசையால் மனைவிக்குத் துரோகம் (Adultery) செய்த ஊழியக்கார்கள் பற்றியும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். கிறிஸ்தவ சபைகளும், நிறுவனங்களும் இன்று இத்தகைய அவலத்தைச் செய்பவர்களுக்குத் தாலாட்டுப்பாடிக் கொண்டிருக்கின்றன.