தெய்வீக பராமரிப்பு
விளக்கவுரை: லமார் மார்டின் (Lamar Martin)
தமிழில்: ஆசிரியர்
(1689 விசுவாச அறிக்கையின் 5-வது அதிகாரத்திற்கான விளக்கவுரையின் ஆரம்பத்தை ஏப்பிரல்-ஜீன் 2002 இதழில் பார்க்கவும். அவ்வதிகாரத்திற்கான விளக்கவுரையின் இறுதிப்பகுதி இது. 1689 விசுவாச அறிக்கையை இதுவரை பெற்றுக்கொண்டிராமவர்கள் அதனை இந்தியாவிலும், ஸ்ரீலாங்காவிலும் 51-ம் பக்கத்தில் தரப்பட்டுள்ள முகரிகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். திருச்சபைகள் சத்தியத்தில வளர இந்த விசுவாச அறிக்கை மிகவும் உதவும்).
இந்த அதிகாரத்தின் முதல் மூன்று பத்திகளை இதற்கு முன் ஆராய்ந்தோம். முதலாவது பத்தி தெய்வீக பராமரிப்பு என்றால் என்ன என்பதை விளக்கியது. அதாவது கர்த்தர் தன்னுடைய சிருஷ்டிகளைக் காத்து, வழிநடத்தி, கட்டுப்படுத்தி ஆளுவதே தெய்வீக பராமரிப்பாகும். இந்த முதலாவது பத்தி இரண்டாவதாக கர்த்தரின் பராமரிப்பு அவருடைய சிருஷ்டிகளில் எதையெல்லாம் தொட்டு எந்தளவுக்கு அவற்றைக் கட்டுப்படுத்தி ஆளுகை செய்கிறதென்பதை விளக்கியது. அதாவது, தான் படைத்த அனைத்தையும், பெரியதில் இருந்து சிறியவை வரையும் அனைத்தையும் கர்த்தர் பராமரிக்கிறார் என்பது இரண்டாவது உண்மை. இறுதியாக முதலாவது பத்தி தெய்வீக பராமரிப்பின் இறுதி நோக்கத்தை விளக்கியது. கர்த்தருடைய பராமரிப்பின் இறுதி நோக்கம் இரண்டு அம்சங்களைக் கொண்டிருப்பதாகப் படித்தோம். (1) வேற்றுதல். (2) பராமரிப்பின் மூலம் கர்த்தரின் ஞானமும், வல்லமையும், நீதியும், எல்லையற்ற நன்மையும், கருணையும் மகிமை அடைதல். சுருக்கமாகக் கூறப்போனால், கர்த்தர் தன்னுடைய மகிமைக்காகவே தான் படைத்த உலகத்தை ஆண்டு, பராமரிக்கிறார் என்று விசுவாச அறிக்கை விளக்குகிறது.