பிரசங்கம் தயாரித்தல் – 2

கடந்த இதழில் பிரசங்கம் தயாரித்தலின்போது பிரசங்கி எடுக்க வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகளை ஆராய்ந்தோம். இந்த ஆரம்ப நடவடிக்கைகள் பிரசங்கத்தை ஆவிக்குரிய விதத்தில் தயாரிக்க அவசியமானவை. இனித் தொடர்ந்து பிரசங்கம் தயாரித்தலில் நாம் அடுத்தபடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வோம்.

பிரசங்கத்திற்கான பொருளை முடிவு செய்தபின், அந்தப் பிரசங்கப் பொருள் காணப்படும் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் அதனை இலக்கண, இலக்கிய, வரலாற்றுபூர்வமாக நிதானித்து ஆராய்ந்து அதில் கொடுக்கப்பட்டள்ள மையப் போதனை என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம். இது முதலில் செய்ய வேண்டிய அவசியமான பணி. இதைச் செய்யாவிட்டால் அந்தப்பகுதியைப் பயன்படுத்தி பிரசங்கம் செய்ய முடியாது. இந்தப்பணியைப் பாடுபட்டு செய்து முடிக்கும்போதுதான் கர்த்தர் அந்தப்பகுதியில் எதைப்போதிக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

Continue reading