ஆன்மீகக் குழப்பம்

முடியாத தொடர்கதை . . .

இந்த தலைப்பு ஒரு சிலருக்கு வித்தியாசமானதாக இருக்கலாம். ஆகவே, இந்தத் தலைப்பைக் குறித்து நான் விளக்கமளிக்க வேண்டியது அவசியம். இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் எல்லா நாடுகளிலுமே ஒரு ஆன்மீகக் குழப்ப நிலை உலவுவதை ஒருவரும் மறுக்க முடியாது. பரிசுத்த ஆவியின் பெயரில் பலர் நடத்திவரும் நகைச்சுவைக் கூட்டங்களையும், ஆராதனை வேளைகளில் சபை, சபையாக நடந்துவரும் கூத்துக்களையும், விசுவாசி யார்? அவிசுவாசி யார்ஈ என்று அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு வித்தியாசமே இல்லாமல், இரண்டுங்கெட்ட நிலையில் சபை வாழ்க்கை அமைந்திருப்பையும் ஆன்மீகக் குழப்பம் என்றல்லாது வேறு எப்படி வர்ணிப்பது? வேதத்தின் அடிப்படையில் வளர வேண்டும், வாழ வேண்டும் என்ற இதயதாகமுள்ள விசுவாசிகளை இங்கும் அங்குமாக நாம் காண முடிந்தபோதும் பரவலாக தமிழினத்தின் மத்தியில் பொதுவாக ஓர் ஆன்மீகக் குழப்பநிலையையே நாம் காண்கிறோம். முடியாத தொடர்கதைபோல் இந்த ஆன்மீகக் குழப்பம் நம்மத்தியில் தொடர்ந்தும் நீடிக்கிறது. கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ சபைகளும் இன்று எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் முடியாத தொடர்கதை போல் நம்மைச் சூழ்ந்துள்ள இவ்வான்மீகக் குழப்ப நிலையே காரணம்.

Continue reading