சீர்திருத்த விசுவாசம்

(இவ்வருடம் ஜனவரி மாத்தில் ஸ்ரீ லங்காவில் வெளியிடப்பட்ட நமது புதிய வெளியீடான “சீர்திருத்த விசுவாசத்தை” மூவர் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். சீர்திருத்த விசுவாசத்தைக்குறித்த இந்த முக்கியமான வெளியீட்டைப் பற்றிய அவர்களுடைய கண்ணோட்டத்தை வாசகர்களுக்கு உதவுமுகமாக இங்கே தந்திருக்கிறோம் -ஆசிரியர்)

அருள்செல்வன், கிருபை இலக்கியம், ஸ்ரீ லங்கா

நான் இந்து மார்க்கத்திலிருந்து கிறிஸ்துவின் கிருபையால்‍தேவனோடு தனிப்பட்ட உறவிற்குள்ளும், சபை ஐக்கியத்திற்கும் வந்தவன். என்னுடைய ஆரம்ப கால கிறிஸ்தவ ஜீவியத்தில் உணர்வுகளால் மட்டும் கிறிஸ்துவைத் தேடியும் அதில் திருப்தி கொண்டும், அதிகம் கேள்விகள் கேட்காமல், ‘உன் சுயபுத்தியில் சாயாதே’ என்ற வசனத்தை தவறான வழியில் பயன்படுத்தி, தெளிந்த புத்தியோடு வேதவசனங்களை ஆராயாமல் துதி, உபவாச ஜெபம் என்று அவற்றில் மட்டும் அதிகமான நேரத்தை செலுத்தும்படி வழிநடத்தப்பட்டவன் நான். இவற்றைச் செய்தவர்களும் அறியாமையினாலேயே அப்படிச் செய்தார்கள் என்பதை நான் அறிவேன்.

Continue reading