பிரசங்கம் தயாரித்தல் (3)

பிரசங்கத்தைத் தயாரிக்கின்ற வேளையில் அதற்கான ஆரம்பக் குறிப்புகளையும், விளக்கமான குறிப்புகளையும் தயாரித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை கடந்த இதழில் பார்த்தோம். இப்படியாக நாம் தயாரிக்கும் குறிப்புகளே பிரசங்கத் தயாரிப்பில் நாம் போக வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டுவனவாக இருக்கின்றன. அனேக பிரசங்கிகள் பிரசங்கத்தை ஏற்கனவே தயாரிக்காமல், ஏதோ ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு எங்கோ ஆரம்பித்து, எங்கோ போய்க்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கே தாம் ஆரம்பித்த பாதை எது? போய்க்கொண்டிருக்கிற பாதை எது? என்பது தெரியாமலிருக்கின்றபோது, கேட்டுக்கொண்டிருக்கிறவர்களுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல்தான் இருககும். பிரசங்க மேடைக்குப் போவதற்கு முன்பாக பிரசங்கிக்கு தான் எதைப்பிரசங்கிக்கப் போகிறோம்? அதை எப்படிப் பிரசங்கிக்கப்போகிறோம்? எப்படி முடிக்கப் போகிறோம்? என்பதெல்லாம் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். பிரசங்க மேடையில் நிற்கும்போது எந்தப் பிரசங்கிக்கும் பரிசுத்த ஆவியானவர் பிரசங்க செய்தியைக் கொடுப்பதில்லை. அவருக்கு சோம்பேரிகளைத் துப்பரவாகப் பிடிக்காது.

Continue reading