திருச்சபை வரலாறு

மத்தியகால ஆரம்பம்

ஆறாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஐரோப்பாவில் புதிய நிகழ்ச்சிகள் நிகழ ஆரம்பித்தன. இதுவரை இருந்து வந்த கிரேக்க, ரோம கலாச்சாரத்தின் பாதிப்புகள் குறையத் தொடங்கின. ரோம சிந்தனைகளோடு டியூடோனிக் சிந்தனைகள் கலந்து புதிய சிந்தனைகள் உருவாகி பரவத் தொடங்கின். முதலாம் கிரெகரி போப்பாக பதவியேற்ற 590ம் ஆண்டை மத்திய காலத்தின் ஆரம்பமாகக் கருதலாம். இத்தாலியின் பெரும்பகுதி இக்காலத்தில் போராலும், பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தது. ரோம சாம்ராஜ்யம் 476ல் வீழ்ந்தபோது இத்தாலிக்கு வெளியில் தனது மகிமையை இழந்திருந்த கத்தோலிக்க சபை மறுபடியும் அந்நிலையை அடைய முடியாத நிலையில் இருந்தது. ரைன், டான்யூப் நதிப்பிரதேசங்களை கத்தோலிகக சபை இழந்திருந்தது. பாபேரியன்களால் கைப்பற்றப்பட்ட ரோமப்பிரதேசங்களில் ஆரியனிசமும் வேறு வேதவிரோதப்போதனைகளும் தலைதூக்கி ஆண்டு கொண்டிருந்தன. ஸ்பெயினிலும் (Spain), கோலிலும் (Gual), இல்லிரியாவிலும் (Illyria) போப்பின் அதிகாரம் பலவீனமாகி இருந்ததோடு ஆபிரிக்காவில் அது இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது.

Continue reading