நீதிமானாக்கும் விசுவாசம்

இறையியல் தெரியாமல் இருப்பதும், இறையியல் கோட்பாடுகளில் தவறுவிடுவதுமே நடைமுறையில் நாம் தவறாக நடப்பதற்கும், போலிப் போதனைகள் உருவாவதற்கும் காரணமாக இருக்கின்றன. கிறிஸ்தவத் தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான நீதிமானாக்குதலைப் (Justification) பற்றிய தவறான விளக்கம் கொடுப்பதில் பலர் இன்று ஈடுபட் டிருக்கின்றனர். ரோமன் கத்தோலிக்க மதத்தோடு உறவாடுவதற்கு ஆசைப் பட்ட சில சுவிசேஷ இயக்கத்தார் சில வருடங்களுக்கு முன்பு கத்தோலிக்க மத விளக்கத்தோடு பொருந்திப்போகும் வகையில் நீதிமானாக்குதலுக்கு விளக்க மளிக்கமுற்பட்டனர். நீதிமானாக்குதலாகிய வேத போதனையில் கைவைப்பது கிறிஸ்தவ விசு¬வாசத்தை நிராகரிப்பதற்கு சமமானது.

நீதிமானாக்கும் விசுவாசமா? இது என்ன பெரிய வார்த்தையாக இருக்கிறதே என்று பயப்படுகிறீர்களா? இது நாம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய சத்தியம் தான். இயேசு கிறிஸ்துவின் மூலம் கர்த்தர் நமக்கு வழங்கும் நீதியை விளக்குகிறது இந்த சத்தியம். நம்மேலிருந்த தேவ கோபத்தை கிறிஸ்து தன்மேல் தாங்கி பாவிகளாகிய நாம் அடையப்போகிற தண்டனையிலிருந்து விடுதலை தர, அவரை நாம் நம்முடைய பாவங்களுக்காக வருந்தி மனந்திரும்பி விசுவாசிக் கின்றபோது அவருடைய கிருபாதாரப் பலியின் அடிப்படையில் கர்த்தர் நம்மை நீதிமான்களாக அறிக்கையிடுகிறார். இந்தவகையில் கர்த்தர் ஆதியி லிட்ட திட்டம் சிலுவையில் நிறைவேறி, நமக்காக மரித்த கிறிஸ்துவை நாம் இரட்சிப்புக்காக விசுவாசிக்கிறபோது நீதிமான்களாகிறோம் (ரோமர் 4:5).

Continue reading