பெந்தகொஸ்தே நாளின் முக்கியத்துவம் (3)

பெந்தகொஸ்தே தினம் நாம் அனுதினமும் சபை வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய எழுப்புதலுக்கு உதாரணமாகவோ அல்லது பரிசுத்த ஆவியானவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய ஞானஸ்நானத்துக்கு உதாரணமாகவோ இல்லாமல் வரலாற்றில் ஒரு முறை மாத்திரமே நிகழ்ந்த நிகழ்ச்சியாக இருந்திருக்கிறது என்பதை இதுவரை கடந்த இதழ்களில் விளக்கியிருக்கிறோம். அப்படியாக மீட்பின் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாக அமைந்து ஒரு தடவை மட்டுமே நிகழ்ந்த பெந்தகொஸ்தே நிகழ்ச்சியின் சில அம்சங்கள் அந்தக் காலத்தில் சபை எல்லா இடங்களிலும் அப்போஸ்தலர்களின் தலைமையில் ஒரேவிதமாக அமைய வேண்டும் என்ப தற்காகவும், சமாரியர்கள் சபைக்குள் கொண்டுவரப்படுவதற்காகவும் எருசலேமுக்கு வெளியில் சமாரியர்கள் மத்தியில் அடையாளமாக நிகழ்ந்தன என்பதையும் கடந்த இதழில் பார்த்தோம். அப்போஸ்தலர் 1:8ல் கிறிஸ்து தந்துள்ள வாக்குத் தந்தங்கள் இந்தவிதமாக அப்போஸ்தலர்களின் சுவிசேஷப் பணியின் மூலம் நிறைவேறி வந்தன. இனி கிறிஸ்துவின் வாக்குத்தத்தத் தின்படி புறஜாதியார்கள் சபைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். யூதர்கள் மத்தியிலும், சமாரியர்கள் மத்தியிலும் சுவிசேஷம் போய்ச் சேர்ந்து சபைகள் எழ ஆரம்பித்து விட்டன. யூதர்கள் இதுவரை வெறுத்து வந்த, பழைய ஏற் பாட்டுப் போதனைகளின்படி யூதர்கள் எந்தத் தொடர்பும் வைத்திருக்கக் கூடாத, புறஜாதியினர் மத்தியில் இனி சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும். தேவர் இனத்தைச் சேர்ந்தவனும், பள்ளனும் ஒரே வீட்டில் வாழ முடியுமா? பாகிஸ்தானும், இந்தியாவும் ஒரே நாடாக இருக்க முடியுமா? அது போலத் தான் இதுவரை யூதர்களும், புறஜாதியினரும் இருந்து வந்திருக்கிறார்கள். அதில் பெருமாற்றம் தோன்றப் போகிறது. வரலாற்றில் இதுவரை நடந்திராத அற்புதம் நிகழப் போகிறது. எபேசியர் நிருபத்தில் 2:14ல் பவுல் அப்போஸ் தலன் சொல்லுவது போல், யூதர்கள், புறஜாதியினராகிய “இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்தெரியப் போகிறார்” கிறிஸ்து இயேசு. “இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனிதனாக சிருஷ்டிக்கப்போகிறார்” இயேசு கிறிஸ்து (2:15).  இது சுவிசேஷப் பிரசங்கத்தின் மூலமாக நடைபெறப்போகிறது. வரலாற்றில் நிகழ்ந்த மேற் கூறிய அற்புதத்தைத்தான் அப்போஸ்தலர் நடபடிகளின் 10-11 அதிகாரங்கள் விளக்குகின்றன. இது வரலாற்றில் ஒரு திருப்புமுனை. அந்தத் திருப்புமுனை எந்தவகையில் நிகழ்ந்தது என்பதை இனி ஆராய்வோம்.

Continue reading