பிரசங்கத்தின் “அறிமுகம்”

கடந்த இதழில் பிரசங்கத்தின் இறுதியில் அந¢தப் பிரசங்கத்தின் அடிப்படையில் தரப்பட வேண்டிய “பயன்பாடு”களைப் பற்றி ஆராய்ந்தோம். இனிப் பிரசங்கத்தின் அறிமுகம் எப்படி அமைய வேண்டும் என்பதை ஆராய்வது அவசியம். பிரசங்கத்தின் எல்லா அம்சங்களுமே முக்கியமானவை. பிரசங்கத்தின் ஏனைய பகுதிகள் நன்றாய் அமைந்து அதன் அறிமுகம் சரிவர அமையாவிட்டால் அது பிரசங்கத்தைப் பாதித்துவிடும். பிரசங்கத்தின் அறிமுகம் வரப்போகும் செய்தியின் ஏனைய பகுதிகள் எப்படி அமையப் போகின்றன என்பதை விளக்குவதாக இருக்கும். ஆகவே, பிரசங்கம் பலனுள்ளதாக அமைய அதன் அறிமுகம் நன்றாக இருப்பது அவசியமாகின்றது. உதாரணத்திற்கு ஒரு நவீன ஓட்டலுக்கு சாப்பிடப் போனால் நாம் ஆர்டர் செய்யும் பிரதான உணவு வருவதற்கு முன்பாக சிற்றுணவாக சிலவற்றை சாப்பிடத் தருவார்கள் (Entree). அது வரப்போகும் உணவை உண்பதற்கு நம்மைத் தயார் செய்வதாக இருக்கும். அந்த ஆரம்பச் சிற்றுணவே பிரதான சாப்பாடு அல்ல. வரப்போகிற சாப்பாட்டை சாப்பிட நம்மைத் தயார் செய்வது அந்த ஆரம்ப சிற்றுணவுதான். எப்போதுமே அந்த ஆரம்பச் சிற்றுணவு சுவைபடத் தயாரிக்கப்பட்டிருக்கும¢. ஏனெனில், சாப்பிட வந்திருக்கிறவர்கள் அது பிடிக்காமல் எழுந்து போய்விடக் கூடா தல்லவா. அதைப்போலத்தான் பிரசங்கத்தின் அறிமுகமும் இருக்க வேண்டும். அறிமுகம் பிரசங்கம் கேட்கிறவர்களுடைய ஆர்வத்தை அதிகரிப்பதாய், ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாய் இருக்க வேண்டும். “பிரசங்கத்தைக் கேட்கிறவர்களுடைய மனதில் அது ஓர் நல்ல எண்ணத்தை ஏற்படுத்த வேண்டியிருப்பதால் அதில் ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால் அதைத் திருத்துவது இலகுவான காரியமல்ல” என்று சொல்லுகிறார் ஆர். எல் டெப்னி (Lectures on sacred rhetoric, R. L. Dabney) அத்தோடு அந்தச் சிற்றுணவு பேருண வாய் இருந்துவிடக்கூடாது. அவ்வாறு இருந்துவிட்டால் சாப்பிட வந்தவர் களுக்கு இனி வரப்போகும் உணவைச் சாப்பிட மனமும், வயிறும் இருக்காது. அதேபோல் அறிமுகத்தின் வேலை பிரசங்கத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமே. அதுவே பிரசங்கமாக நீண்டுவிடக்கூடாது. இந்த வகையில் அமைய வேண்டிய பிரசங்கத்தின் அறிமுகத்தை இனி விவரமாகப் பார்ப்போம்.

Continue reading