கொள்கைகளற்ற கிறிஸ்தவமா?

“இயேசு போதும், கொள்கை வேண்டாம்” என்பது தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் கருத்தாக இருக்கின் றது. இயேசு வேறு, கொள்கை வேறு என்று பிரித்துப் பார்ப் பதை சபைப் போதகர்களில் இருந்து சாதாரண கிறிஸ்தவர்கள் வரை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒரு முறை ஒரு போதகர் சொன்னார், “இறையியல் கோட்பாடு இருபத்தைந்து வீதம் இருந்தால் போதும், எழுபத்தைந்து வீதம் நடைமுறைக்கு அவசியமான காரியங்களில் தான் போதனை தேவை” என்று. இறையியல் வேறு, நடைமுறைப் போதனை வேறு என்று பிரித்துப் பார்க்கும் இந்தப் போதகர் தமிழ் கிறிஸ்தவ போதகர்களை பிரதிபலிக்கின்ற ஒரு உதாரணம்தான்.

இறையியல் கொள்கைகளைக் கண்டு தமிழ் கிறிஸ்தவம் பயந்து ஓடுவ தற்குக் காரணமென்ன? இறையியல் கொள்கைகளும், போதனைகளுமற்ற பிரசங்கங்கள் தமிழ் கிறிஸ்தவத்தை பல்லாண்டுகளாக அலைக்களித்து வருவதற்குக் காரணமென்ன? கொள்கைகளை நிராகரித்து இயேசுவுக்கும், கோட்பாடுகளுக்கும் சம்பந்தமேயில்லை என்று தமிழ் கிறிஸ்தவம் முடிவு கட்டியிருப்பதற்குக் காரணமென்ன? என்ற கேள்விகளை நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை. இதற்கு நான்கு முக்கிய காரணங்கள் இருப்பதாக எனக்குத் தெரிகிறது.

Continue reading