இன்று தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளில் எல்லாம் கிறிஸ்தவர்கள் மத்தியில் சூடுபிடித்து நிற்கும் ஒரு போதனைக்குப் பெயர்தான் ‘செழிப்பு உபதேசம்’. இதனை ஆங்கிலத்தில் Prosperity Theology என்று அழைக்கிறார்கள். இதுவரை இதுபற்றி அதிகம் ஆராய்ந்து அறிந்திராதவர்களுக்கு முதலில் இதை சுருக்கமாக விளக்குவது அவசியம். அடிப்படையில் இந்தப் போதனை சொல்வதெல்லாம், விசுவாசிகளுக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் ஆசீர்வாதம் பெருகும், அதிகரிக்கும் என்பதுதான். அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், விசுவாசி களுக்கு வாழ்க்கையில் துன்பங்களுக்கே இடமில்லை, பணம் பெருகும், தொழில் சிறக்கும், நன்மைகள் ஆறாகப் புரண்டோடும் என்று இந்தப் போதனையை அளிக்கிறவர்கள் சொல்லி வருகிறார்கள்.