ஒரு சில கண்டனக் குரல்களுக்கான பதில்
மெல் கிப்சனுடைய ‘கிறிஸ்துவின் பாடுகள்’ படத்தை வேத போத னைகளின் அடிப்படையில் கடந்த இதழில் விமர்சனம் செய் திருந்தோம். அதைக் கைப்பிரதியாக பல ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் வெளியிட்டு பல நகரங்களில் விநியோகித்தோம். மெல் கிப்சன் கிறிஸ்துவை அறியாதவர். அவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். படமும் அந்த மதத்தை மகிமைப்படுத்தி அதனு டைய போதனைகளின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டிருந்தது என்பதை, அதாவது மெல் கிப்சனே தன்னுடைய பேட்டிகளில் விபரித் திருந்தையும் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்தப் படம் கிறிஸ்தவ சுவிசேஷ த்தை விளக்குவதற்கு உதவாது என்றும், இதைப் பார்த்து பாவி மனந் திரும்ப வழி இல்லை என்றும் எழுதியிருந்தோம். அந்த விமர்சனம் பல இடங்களிலும் பலவிதமான வரவேற்பைப் பெற்றது. “கத்தோலிக்க மதத்தைப் பற்றிய உண்மைகளை வெளியிட்டு எங்களுடைய கண்களைத் திறந்ததற்காக நன்றி” என்று எழுதியவர்கள் பலர். அவர்களுடைய கண்கள் திறக்க இந்த ஆக்கம் உதவியிருப்பதற்காக கர்த்தருக்கு நன்றி. அதேநேரம் சுவிசேஷம் சொல்லுவதற்குக் கிடைத்திருக்கும் அருமையான சந்தர்ப் பத்தை இப்படிக் குறைகூறி எழுதுவதா? என்று ஆத்திரப்பட்டிருக் கிறார்கள் ஒரு சிலர். எப்படியாவது கிறிஸ்துவை அறியாதவன் மூலமாக வும் கிறிஸ்துவைப் பற்றி பாவிகள் தெரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத் ததே என்று சொன்னவர்களும் உண்டு. முக்கியமாக படம், காட்சி என்று கண்களுக்கு விருந்தளித்து சுவிசேஷத்தை சொல்வதை நாம் கண்டித் திருப்பது சிலருக்கு பிடிக்காமலும் போயிருக்கிறது. இருந்தாலும் இதை யெல்லாம் நாம் எதிர்பார்த்ததுதான். எந்தளவுக்கு ரோமன் கத்தோலிக்க மதத்தின் ஆட்சி தமிழ் கிறிஸ்தவர்களின் மத்தியில் இருக்கிறது என்பதை இந்தவிதமான எதிர்மறையான ‘வரவேற்புகள்’ எங்களுக்கு தெளிவாக வெளிப்படுத்தின. அது எங்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை.