திருச்சபை வரலாறு

போலி ஆவணங்களும், ரோம சபைக் குழப்பங்களும்

சபை வரலாற்றின் அனைத்து அத்தியாயங்களிலும் வியப்பூட்டு வதாக இருப்பது ரோமின் போப்புகள் தயாரித்த போலி ஆவணங் களும், போலிக் கட்டளைகள் பற்றிய உண்மைகளும், கொன்ஸ் டன்டைன் அளித்ததாகக் கருதப்படும் நன்கொடையும். ரோமப் போப்புகள் தங்களுடைய பதவிக்காலத்தில் அனேக அதிகாரபூர்வமான கட்டளைகளையும், தீர்ப்புகளையும் வழங்கி இருக்கிறார்கள். அவற்றை ஆவணங்களாக (Decretals) சபை காத்து வந்தது. 850-ம் ஆண்டளவில் முன்னைய போப்புகளின் கட்டளைகள் என்ற பெயரில் அனேக போலிக் கட்டளைகளும், ஆவணங்களும் பிராங்கிஸ் பிரிவைச் சேர்ந்தவர்களால் விநியோகிக்கப்பட்டன. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இசிடோர் செவலே (Isidore Seville) என்ற பிரபலமான எழுத்தாளருக்கு இது சொந்தமானது என்ற தகவலும் உலவ ஆரம்பித்தது. ஆனால், போப்புக்களின் மெய்யான ஆவணங்கள் என்று கருதப்படுபவை சிரிசியசினுடைய (Siricius 384-398) காலத்தைச் சேர்ந்தவை. இந்தப் போலி ஆவணங்களில் அடங்கியிருந்த கட்டளைகளும், கடிதங்களும் முதலாம் நூற்றாண்டில் இருந்த போப்பால் எழுதப்பட்டவை என்ற அறிவிப்போடு விநியோகிக்கப்பட்டன. இந்தப் போலி ஆவணங்களைத் தயாரித்தவன் நல்ல படிப்பறிவுள்ளவனாகவும், இந்தக் காரியத்தில் கைதேர்ந்தவனாகவும் இருந்திருக்கிறான்.

Continue reading