சபையா, சாத்தானின் குகையா?

தமிழ் கிறிஸ்தவ சபைகள் இன்று சபை அமைப்பை அலட்சியப் படுத்தி நடந்து வருகின்றன. பாரம்பரிய சபைகள் (Traditional Churches) சடங்குக்கும் பாரம்பரியத்திற்கும் பலியாகி ரோமன் கத்தோலிக்க மதத்தைப்போல குருமார்களை வைத்துக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. அவர்களுடைய சபை அமைப்பு முறையை வேதத் தில் பார்க்க முடியாது. பாரம்பரிய சபைகளுக்கு வெளியில் இருக்கும் பிரிவுகள் தனியாக இயங்கி வரும் சபைகள். இவற்றில் பாப்திஸ்து, சகோ தரத்துவ சபைகள், பெந்தகொஸ்தே/கெரிஸ்மெட்டிக் சபைகளை உள்ளடக் கலாம். பெந்தகொஸ்தே/கெரிஸ்மெட்டிக் சபைகளில் பெரும்பாலானவை வேதத்தைக் குழிதோன்டிப் புதைத்து நெடுங்காலமாகி விட்டது. சபை அமைப்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் அளவுக்கு அவர்களுடைய நிலைமை இன்று. அவர்களில் பலர் தங்களை அப்போஸ் தலர்களாகவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். முதலாம் நூற்றாண்டில் இருக்க வேண்டியவர்கள், 20 நூற்றாண்டுகள் கடந்து போய் விட்டது கூட தெரியாமல் ஊழியம் செய்து வருகிறார்கள். இப்பட்டியலில் எஞ்சி யிருக்கும் பிரிவுகள் பாப்திஸ்துகளும், சகோதரத்துவ சபைகளும்தான்.

Continue reading