கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 90: கிறிஸ்துவை விசுவாசித்தல் என்றால் என்ன?

பதில்: தங்களுடைய இரட்சிப்பிற்காக பாவிகள் சுவிசேஷத்தின் மூலம் தமக்கு முன்வைக்கப்படுகிற கிறிஸ்துவைப் பெற்று அவரில் மட்டுமே தங்கியிருக்கும் இரட்சிப் பிற்குரிய கிருபையே கிறிஸ்துவை விசுவாசித்தலாகும்.

(எபேசியர் 2:8-10; யோவான் 1:12)

கேள்வி 91: ஜீவனுக்குரிய மனந்திரும்புதல் என்றால் என்ன?

பதில்: பாவி தன்னுடைய பாவத்தைக்குறித்த மெய்யான உணர்வோடும், கிறிஸ்துவில் கர்த்தர் தனக்களித்துள்ள கிருபையின் புரிந்துகொள்ளுதலோடும், துக்கத்தோடு தன்னு டைய பாவத்தை வெறுத்து, கீழ்ப்படிதலைத் தன்னுடைய முழுநோக்கமாகக் கொண்டு அதற்காக உழைக்கும்படி கர்த்தரை நாடும் இரட்சிக்கும் கிருபையே ஜீவனுக்குரிய மனந்திரும்புதலாகும்.

(அப்போஸ்தலர் 11:18; 2:37, 38; யோவேல் 2:12-13; எரேமியா 31:18-19; எசேக்கியல் 36:31; சங்கீதம் 119:59.)

விளக்கவுரை: மேல்வரும் இரு வினாவிடைகளும் கிறிஸ்துவின் மீட்பு எந்த வகையில் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் நிறைவேறுகிறது என்பதைப் பற்றியதாகும். மனந்திரும்புதல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு முதலில் பதிலைப் பார்ப்போம். ஒரு பாவியினுடைய இருதயத்திலும், ஆவியிலும் முழுமையான ஒரு மாற்றம் ஏற்பட்டு அவன் தன்னுடைய சுயநம்பிக்கை, சுயமதிப்பு எல்லாவற்றையும் துறந்து இரட்சிப்புக்காக கிறிஸ்துவை மட்டும் நாடி அவரை விசுவாசிப்பதே மனந்திரும்புதலாகும்.

Continue reading