திருச்சபை வரலாறு

போப்புகளின் வளர்ச்சியின் உச்சகட்டம்

ஹில்டபிராண்டு (Hilderbrand) 1073ல் ஏழாம் கிரெகரி என்ற பெயரோடு போப்பாக பதவியேற்றபின் உலகத்தில் சபையின் பங்கில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தார். பேரரசன் முதற்கொண்டு சாதாரண மனிதர்கள்வரை உலகத்தில் அனைவரும் தன்னுடைய அதிகாரத்துக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். கிறிஸ்துவின் பிரதிநிதியாக, பேதுருவின் வழிவந்த தனக்கு இந்த உலகத்தில் சகல அதிகாரமும் இருப்பதாக அறிவித்தார்.

இதன் முதற்படியாக குருமார்களில் சிலர் திருமண பந்தத்தில் ஈடுபடலாம் என்ற கருத்தை முழுபலத்தோடு தாக்கினார். அன்றிலிருந்து கத்தோலிக்க மதகுருமார் பரிசுத்தமுள்ளதும், சிறப்பான அனுபவமுமான திருமண பந்தத்தில் ஈடுபட்டு குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பது அடியோடு தடைசெய்யப்பட்டது. அடுத்ததாக சபை சம்பந்தமான காரியங்களிலும், நியமனங்களிலும் அரசு அங்கீகாரம் பெறுவதை ஹில்டபிராண்டு வன்மையாகக் கண்டித்தார். இது அங்கீகார சடங்கு (Investiture) என்று அழைக்கப்பட்டது. எவராவது சட்டரீதியான ஒரு பதவி நியமனம் பெறுவதற்கோ அல்லது அதிகாரபூர்வமாக எதையாவது பெற்றுக்கொள்ளும்போதோ அதற்கு அடையாளமாக இந்த அங்கீகாரம் அமைந்திருந்தது. சபையைப் பொறுத்தவரையில் இந்த அங்கீகாரம் அவசியமற்றது என்பது ஹில்ட பிராண்டின் வாதமாக இருந்தது. சபைக்காரியங்களில் அரசின் தலையீடாக இதை அவர் கருதினார். இது நாட்டு நிர்வாகத்துக்கு அவசியமாக இருந்த போதும் ஹில்டர்பிராண்டு எதற்கும் மசிவதாயில்லை.

Continue reading