சீயோன் மலையும், அண்ணாமலையும்

இந்து மதத்தில் இயேசுவைக் காணப்புறப்பட்டிருக்கும் சிலரைப் பற்றி இந்தப் பத்திரிகையில் நாம் இதற்கு முன்பு எழுதியிருக்கிறோம் (4/2, 98; 6/3-4, 2000). தமிழகத்தைச் சேர்ந்த புலவர் தெய்வநாயகம், சாது செல்லப்பா ஆகியோர் இந்து மத வேதங்களுக்கும், சடங்குகளுக்கும் கிறிஸ்தவ விளக்கம் அளித்து இந்து மதத்தவர்கள் தங்கள் மதத்திலிருந்தே சுவிசே ஷத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற தவறான போலிப்போதனையை அளித்து வருவதை “இந்து மதத்தில் இயேசுவா?” என்ற நூலிலும் விளக்கி எழுதியிருக் கிறேன். வேத அடிப்படையிலான திருச்சபைகள் பெருமளவுக்கு இல்லாத தமிழினத் தில் வேதத்தின் அதிகாரமும், போதுமான தன்மையும் அனேகருக்கு புலப்படாத நிலையில் ‘ஆலையில்லாத ஊரில் இலுப்பைப்பூ சக்கரை’ என்ற மொழிக்கிணங்க இத்தகைய போலிப்போதனைகள் கேட்பாரின்றி தலைவிரித்தாடுவது இயற்கையே.

சமீபத்தில் நான் தமிழகத்தில் கன்னியாகுமாரி மாவட்டத்திற்குப் போயிருந்த போது அங்கே ‘திருவள்ளுவர் திருச்சபை’ என்ற பெயரில் ஒரு திருச்சபை உருவாகியிருப்பதாக அறிந்தேன். இது புலவர் தெய்வநாயகத்தின் போதனையில் மயங்கி உருவாயிருக்கின்ற ஒரு போலிச்சபை. திருவள்ளுவர் தமிழினத்திற்கே சொந்தமான ஒரு புலவராகவும், சிறந்த கவிஞராகவும் இருந்தபோதும் இல்லாத தைச் சொல்லி அவரைக் கிறிஸ்தவத்தோடு தொடர்புபடு¢த்துவது கிறிஸ்துவுக்கே அடுக்காது. நெஞ்சில் ஈரமின்றி இன்று இதைச் சிலர் செய்து வருகிறார்கள்.

Continue reading