சிக்கலான சில வேதப்பகுதிகள்

வேதத்தில் விளங்கிக்கொள்வதற்கு கடினமான சில பகுதிகள் உண்டு. சிலர் அவற்றைக் குழப்பமான பகுதிகளாகவும், விளங்கிக்கொள்ளவே முடியாத பகுதிகளாக வும் கருதி அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். வேறுசிலர் அப்பகுதிகளுக்கு தவறான விளக்கங்களைக் கொடுத்துவிடுகிறார்கள். வேதத்தை எழுத்தில் தந்திருக்கும் கர்த்தரே விளங்கிக்கொள்வதற்கு கடினமானதாக இருக்கும் பகுதிகளையும் தந்துள்ளார். அவற்றை முறையாக, கவனத்தோடும் ஆவியின் துணையோடும் ஆராய்ந்து படித்தால் கர்த்தர் அவற்றின் மூலம் வெளிப்படுத்தும் சத்தியங்களை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். அத்தகைய வேதப்பகுதிகளை வாசகர்களின் நன்மை கருதி ஆராய விருக்கிறோம். போதகர் ஃபிரெட் சீபர்ட் (Fred Siebert, Australia) இந்தப் பகுதிகளுக்கு விளக்கமளிக்கிறார்.

கடந்த இதழில் யூதாவில் ஒரு பகுதியை ஆராந்தோம். இந்த இதழில் பவுலின் நிருபங்களில் ஒன்றில் காணப்படும், சிக்கலானதாக நமக்குத் தோன்றுகின்ற ஒரு பகுதியை ஆராய்வோம். இந்தப் பகுதி பெண் களின் இரட்சிப்பைக் குறித்து விளக்குகின்றது.

“அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பி லும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப் பேற்றி னாலே இரட்சிக்கப்படுவாள்” (1 தீமோத்தேயு 2:15).

இந்தப் பகுதி அமைந்திருக்கும் சந்தர்ப்பம் விளக்கும் உண்மைகள்

பவுல் வாலிபப் போதகனாக இருந்த தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் நிருபத்தில் திருச்சபை நடவடிக்கைகளைப் பற்றி அவசியமான போதனைகளை அளிக்கிறார். கர்த்தரின் சபையில் அங்கம் வகிப்பவர்கள் அந்தச் சபையில் தேவபயத்தோடு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பது மிகவும் அவசியம் என்கிறார் பவுல்.

Continue reading