புறஜாதிப் பண்பாடும், நாமும்

ஒளிக்கும், இருளுக்கும் உறவேது? தேவனுடைய ஆலயத்துக்கும் சிலைகளுக்கும் உறவேது? என்று கேட்கிறது வேதம் (2 கொரி. 6:14-16). இஸ்ரவேலர் புறஜாதியினரோடு எந்தத் தொடர்பும் வைக்கா மல் பிரிந்து தனித்து வாழும்படிக் கட்டளையிட்டார் கர்த்தர். ஆராதனை முதற்கொண்டு சமூக வாழ்க்கைவரை அனைத்திலும் புறஜாதியினரின் ஜாடை இருக்கக் கூடாது என்று அவர் கட்டளையிட்டார். புறஜாதியினரின் வழிப்படி போனவர்களை அவர் தயவுதாட்சண்யம் இன்றி அழிக்கவும் தவறவில்லை. மற்றவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்பது கர்த்தரின் நியதியாக இருந்தது. இந்தக் கோட்பாட்டை நாம் பழைய ஏற்பாடு முழுவதும் தெளிவாகக் காணலாம். இஸ்ரவேலர் புறஜாதியினரைப் பிரிந்து தனக்கென வாழ்ந்து தன்னை மட்டுமே மகிமைப்படுத்த வேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாக இருந்தது. இதிலிருந்து நாம் மூன்று முக்கிய உண்மைகளை அறிந்துகொள்ளுகிறோம்.

(1) கர்த்தர் மட்டுமே தேவன்.

(2) கர்த்தரின் வழியில் மட்டுமே அவருடைய பிள்ளைகள் நடக்க வேண்டும்.

(3) கர்த்தருக்கு விரோதமான எந்த வழிகளிலும் அவருடைய பிள்ளை கள் போகக்கூடாது.

Continue reading