சாம்பார் இறையியல் ஊழியம்

இதென்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? தொடர்ந்து வாசித்தால் இது என்ன என்பது உங்களுக்குப் புரியும். சாம்பரைத் தெரியாத, ருசித்திராத தமிழர்கள் இருக்க முடியாது. அது நம்முடைய உணவின் முக்கிய அம்சம். சாம்பாரின் மகிமையே அதில் பலவிதமான காய்கறி வகைகளும் சேர்ந்திருப்பதுதான். முருங்கக்காய், கத்தரிக்காய் என்று அதில் எந்தக் காயையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படிப் பலவிதமான காய்கறிகளையும் சேர்த்துத் தயாரிப்பதுதான் சாம்பார். அப்படி இல்லாததற்குப் பெயர் சாம்பாராயிருக்காது.

இப்படிப் பல்வேறு காய்கறி வகைகளும் இணைந்து சாம்பார் இருக்க லாம். அதை நாம் சுவைத்து மகிழலாம். ஆனால், இந்த சாம்பார் ரெசிப்பியை (Recipe) ஆத்மீகக் காரியத்துக்கு நாம் ஒருபோதும் பயன்படுத்த முடியாது. அது பொருந்திவராது. இதை அனேகர் அறியாதிருக்கிறார்கள். நமக்கு சாம்பார் பிடிக்கிறது; சாம்பார் இறையியல் பிடிக்கவில்லை. இன்றை க்கு தமிழினத்தின் இறையியல் சாம்பாராய்த்தான் இருக்கிறது. அதாவது ஒருவிஷயத்தைப் பற்றி ஏறுக்குமாறானதும், ஒத்துப் போயும், போகாமலு மிருக்கும் சகலவிதமான போதனைகளும் கலந்தே எல்லா இடங்களிலும் போதிக்கப்படுகின்றன; பின்பற்றப்படுகின்றன. அந்தவிதமாகவே ஆத்துமாக் களும் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிறார்கள். ஒரு ஆத்மீகப் போதனைக்கு ஒரு விளக்கம் மட்டுமே உண்டு என்பதை நம்மினத்து ஆத்துமாக்களால் ஜீரணித்துக்கொள்ள முடியாமலிருக்கிறது. சாம்பாரையே சாப்பிட்டுப் பழகிப்போய் தனிக்காய்கறிக்கூட்டு பிடிக்காமல் போன மனிதனைப் போல அவர்கள் நடந்துகொள்கிறார்கள்.

Continue reading